நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Saturday, October 22, 2011

பலகீனமடையும் அன்னா ஹசாரே!!


அரசியல் நடவடிக்கை களுக்கு எதிர்ப்பு தெரி வித்து, அன்னா ஹசாரே குழுவில் இருந்து மேலும் சிலர் விலகக் கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஹசாரேயும், அவரது குழுவினரும் `ஊழலுக்கு எதிரான இந்தியா' என்ற அமைப்பை உருவாக்கி உள்ளனர்.

அரியானா மாநிலம் ஹிசார் நாடாளுமன்ற தொகுதிக்கு சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் அன்னா ஹசாரே குழு வினர் காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய் தனர்.

மேலும் இந்த குழுவில் இடம் பெற் றுள்ள முக்கிய உறுப் பினரான மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷண், காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு காண அங்கு பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று கூறியது பெரும் சர்ச் சையை ஏற்படுத்தியது.

இப்படியாக அன்னா ஹசாரே குழுவின் சில செயல்பாடுகள் அரசி யல் ரீதியில் அமைந்து இருப்பது அந்த அமைப் பில் சலசலப்பை ஏற் படுத்தி உள்ளது.

ஹிசார் தொகுதியில் காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்னா ஹசாரே குழு வில் இருந்து பி.வி.ராஜ கோபால், ராஜீந்தர் சிங் ஆகிய 2 உறுப்பினர்கள் நேற்று முன்தினம் வில கினார்கள்.

இவர்களைத் தொடர்ந்து, மேலும் சிலர் அந்த குழுவில் இருந்து விலகக்கூடும் என்று தகவல் வெளி யாகி உள்ளது. அன்னா ஹசாரே குழுவில் இடம் பெற்றுள்ள டெல்லி கத் தோலிக்க ஆர்ச் பிஷப் வின்சென்ட் எம்.கான் செஸ்சாவ் அதிருப்தியில் இருப்பதாகவும், எனவே அவரும் விலகக்கூடும் என்று தகவல் வெளி யாகி உள்ளது.

பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த வர்கள் இருக்கும் சமு தாயத்தின் தலைவரான அவர் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு எதிரான பிரசாரத்திலோ அல்லது ஆதரவான பிரசாரத் திலோ பங்கு கொள்ள மாட்டார் என்று டெல் லியில் கத்தோலிக்க கிறிஸ்தவ தலைவர் ஒருவர் தெரிவித்தார்.

அன்னா ஹசாரே யுடன் சேர்ந்து ஊழ லுக்கு எதிரான இந்தியா என்ற அமைப்பை உரு வாக்கிய 20 பேரில் கத் தோலிக்க ஆர்ச் பிஷப் வின்சென்ட் எம்.கான் செஸ்சாவ்வும் ஒருவர் ஆவார்.

இந்த அமைப்பில் உள்ள உறுப்பினர்களில் பெரும்பலானோருக்கு அன்னா ஹசரேயுடன் நல்லுறவு இருந்த போதி லும் அரவிந்த் கெஜ்ரி வால், கிரண் பேடி உள்ளிட்ட சிலரின் செயல் பாடுகளில் கருத்து வேறுபாடு இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் அன்னா ஹசாரே குழுவில் இருந்து மெகமூத் மதானி, சையத் ரிஸ்வி, சையத் ஷா பஸ்லுர் ரகுமான் வாய்சி ஆகி யோரும் விலக வாய்ப்பு இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித் தன. ஆனால் தனது குழு வில் இருந்து மேலும் யாரும் விலகாமல் இருக்க அவர்களை சமா தானப்படுத்தும் முயற்சி யில் அன்னா ஹசாரே ஈடுபடுவார் என்று கூறப் படுகிறது.

No comments:

Post a Comment

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...