நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Saturday, October 22, 2011

நீதிபதி சிங்வி விசாரிப்பார் உச்சநீதிமன்றம் அறிவிப்பு

பேரறிவாளன், சாந்தன், முருகன் தூக்குத் தண் டனை வழக்கு விசார ணையை உச்சநீதிமன்றத் தின் 3 பேர் கொண்ட `பெஞ்ச்' விசாரிக்க மறுத்து விட்டது. வக்கீலின் கோரிக் கையை ஏற்று நீதிபதி கள், ஏற்கனவே இந்த வழக்கை விசாரித்த நீதி பதி சிங்வி விசாரிப்பார் என அறிவித்தனர்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண் டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரின் தூக்குத் தண்டனையை சென்னை உயர்நீதிமன் றம் 8 வாரத்துக்கு ரத்து செய்து உத்தரவிட்டது.

இதற்கிடையே இந்த வழக்கு விசாரணையை டில்லி உச்சநீதிமன்றத் துக்கு மாற்ற வேண்டும் என்று, காங்கிரஸ் கட்சி யின் ஒரு அமைப்பின் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு மீதான விசா ரணை நீதிபதி சிங்வி முன்னிலையில் நடந்து வந்தது.

இந்த மனு மீதான விசாரணை நேற்று உச்ச நீதிமன்றத்தில் நடப்ப தாக இருந்தது. ஆனால் இந்த மனுவை ஏற்கனவே விசாரித்து வந்த நீதிபதி சிங்வி விடுமுறையில் இருந்ததால், இந்த மனு மீதான விசாரணையை நீதிபதிகள் அல்டாமஸ் கபீர், டத்து, சி.கே.பிர சாத் ஆகிய மூவர் அமர் வின் முன்பு நேற்று விசா ரணைக்கு வந்தது.

நீதிமன்றம் தொடங் கியவுடன் வக்கீல் ராம் ஜெத்மலானி எழுந்து, `இதுபற்றிய விசாரணை, ஏற்கனவே நீதிபதி சிங்வி அமர்வில் நடத்தப்பட்டு விட்டது. வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டு உள்ளன. அதுபற்றித்தான் முடிவு செய்து இருக்கும் தீர்ப்பை, தமிழ்நாடு அரசு தங்கள் தரப்பு பதிலை எழுத்து மூலமாக தருவ தற்கு அவகாசம் கேட் டதால், தற்பொழுது அறிவிக்கவில்லை என்று கூறி நீதிபதி சிங்வி தெரி வித்துள்ளார்' என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து நீதிபதி கபீர், `அப்படியா னால், இந்த அமர்வு நீதி மன்றம் இந்த வழக்கு விசா ரணையை எடுத்துக் கொள்ளாது' என்று கூறிவிட்டார். எனவே, இந்த வழக்கு, மீண்டும் நீதிபதி சிங்வி அமர்வுக்கே செல்லும் வாய்ப்பு இருக்கிறது. வழக்கு விசாரணை முடிந்ததும் செய்தியா ளர்களிடம் ராம் ஜெத் மலானி கூறியதாவது:-

மூன்று தமிழர்கள் உயிரைக் காப்பாற்ற, வைகோ உணர்வுபூர்வ மாகப் போராடி வரு கிறார். விசாரணையை மாற்ற வேண்டும் என் கின்ற மனு, தள்ளுபடி செய்யப்படும் என்றும், தூக்குத் தண்டனையை ரத்து செய்து, மூன்று பேர்களுடைய உயிரை யும் உறுதியாக காப் பாற்ற முடியும் என்றும் உறுதியாக நம்புகிறேன். - இவ்வாறு ராம் ஜெத் மலானி கூறினார்.

No comments:

Post a Comment

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...