நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, November 21, 2011

நடிகை அஞ்சலி யாரையும் காதலிக்கவில்லை !

அவர் வெளியிட்டுள்ள செய்தியில், அங்காடித்தெரு மூலம் எனக்கொரு அங்கீகராத்தை கொடுத்த ரசிகர், ரசிகைகள் மற்றும் கலையுலக நண்பர்களுக்கு எங்கேயும் எப்பொழுதும் நன்றியுள்ளவளாக இருப்பேன். வாழ்க்கையில் ஜெயிக்க, போராடித்தான் ஆக வேண்டும். ஐந்து ஆண்டுகள் எனது போராட்டத்துக்குப் பிறகு இன்று நல்ல நடிகை என்று அந்தஸ்தில் கொஞ்சம் வளர்த்திருக்கிறேன். இப்போது தான் நல்ல நல்ல படங்கள் எனக்கு வருகிறது. அந்த மகிழ்ச்சியில் நான் இருக்கிறேன். அந்த மகிழ்ச்சியை கெடுப்பது போன்று ஒரு நடிகருடன் காதல், விரைவில் திருமணம் என்று பத்திரிக்கைகளில் வருகிற செய்திகளை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன்.

என்னுடன் இணைத்து கிசுகிசுக்கப்படும் நடிகருடன் இணைந்து ஒரே ஒரு படத்தில் தான் நடித்தேன். அதற்குபிறகு வந்த கிசுகிசுக்களால், இனி அந்த நடிகருடன் நடிப்பதில்லை என்று முடிவெடுத்து, சில படங்களை தவிர்த்தேன். நான் இன்னும் வளர வேண்டும். நல்ல நடிகை என்று விருதுகளை வாங்க வேண்டும் என்று ஆசையில் இருக்கிறேன். எனது இந்த ஆசைகளுக்கு உங்களிடமிருந்து வாழ்த்துக்களையும், ஆதரவையும் வேண்டுகிறேன்.

எனக்கு இதுவரை யாருடனும் காதல் இல்லை... இதை பகிரங்கமாக அறிவிக்கிறேன். தயவு செய்து மேற்கொண்டு அந்த நடிகருடன் இணைத்து வரும் கிசுகிசுக்களை நம்பாதீர்கள்.

இவ்வாறு அஞ்சலி கூறியுள்ளார்

1 comment:

  1. எனக்கு இதுவரை யாருடனும் காதல் இல்லை..//

    நம்பிட்டோம் போதுமா ஹி ஹி [[என்னடா ஹி ஹி]]

    ReplyDelete

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...