நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Saturday, November 19, 2011

மிக்சி – மின்சாரம்! கிரைண்டர்- பால்! பேன் – பஸ்!

தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சி வந்தால் எல்லாமே அதிரடி தான். இலவசமாக கொடுத்தாலும் அதிரடியாகவே இருக்கும்.

கடந்த 2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், இலவச டிவியை அறிவித்து தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. அந்தத் தேர்தலில் இலவசத்தை கடுமையாக விமர்சித்து, ஜெயலலிதா பேசினார். அத்தேர்தலில், தி.மு.க. அடித்துப் பிடித்து ஆட்சிக்கு வந்ததது.

அடுத்த 2011ம் ஆண்டு தேர்தலில், இலவசத்தை எதிர்த்து பேசிய ஜெயலலிதா தமிழ்நாட்டு மக்களுக்கு மிக்சி, கிரைண்டர், பேன் ஆகிய மூன்றையும் இலவசமாக தருவதாக அறிவித்தார். ஆட்சிக்கும் வந்தார்.

அறிவித்த படி செப்டம்பர் மாதம் 15ம் தேதி பல ஊர்களில் இலவசமாக மிக்சி, கிரைண்டர், பேன் கிடைத்தது. இனி, மாணவ மாணவிகளுக்கு இலவச லேப்-டாப் கிடைக்கப் போகிறது.

இப்படி இலவசமாக மக்கள் எல்லாவற்றையும் பெற்றுக் கொண்டு, மின் கட்டணத்தை ஏற்றினால் எதிர்க்கவா போகிறார்கள்?

பஸ் கட்டணத்தை அதிகரித்தால், ஆர்ப்பாட்டமா செய்யப் போகிறார்கள்?

பால் விலையை உயர்த்தினால், மறியலா நடத்தப் போகிறார்கள்?

இந்த விலையை எப்படியும் மக்கள் வரவேற்றுத்தான் ஆக வேண்டும். ஆமாம், இலவசம் கொடுக்கும் போது ஆர்ப்பரிக்கும் மக்கள், இந்த உயர்வை ஏற்றுக்கொண்டுத்தானே ஆக வேண்டும்.

No comments:

Post a Comment

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...