நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Sunday, December 4, 2011

இந்தியர்களின் கறுப்புப்பணம்


வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப்பண விபரங்களை அடுத்த வருடம் வெளியிடப் போவதாக விக்கிலீக்ஸ் நிறுவனர் அசாஞ்ச் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கறுப்புப்பணம் பற்றிய தகவல்கள் அவர்களின் வங்கிக் கணக்குகளுடன் எதிர்வருகிற 2012 ஆம் ஆண்டு வெளியிடப்படும் என விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் தெரிவித்துள்ளார்.

இந்தியத் தலைநகர் டெல்லியில் நடந்த ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகை நிகழ்ச்சி ஒன்றில் வீடியோ மாநாடு மூலம் லண்டனில் இருந்து கலந்து கொண்ட அசாஞ்ச் கூறியதாவது, மத்திய புலனாய்வுத் துறை மின்னஞ்சல்களில் இருந்து சீன உளவுத் துறை தகவல்களைத் திருடியதற்கு என்னிடம் ஆதாரங்கள் உள்ளன.

இந்தியாவின் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் தொடர்புகளை மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஒட்டுக் கேட்டு வருகின்றன. அதனால் இந்தியா பாதுகாப்பான தகவல் தொடர்பைக் கையாள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று அசாஞ்ச் தெரிவித்தார்.

டிஸ்கி: அட சீக்கிரம் சொல்லுங்கப்பா

No comments:

Post a Comment

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...