நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Saturday, December 3, 2011

சேரனுடன் பானு


தாமிரபரணி தண்ணீருக்கு அபார ருசி, அதே நேரத்தில் அந்த தண்ணீரை பருகியவர்களுக்கு மூக்கு முட்ட கோபமும் வருமாம்.

அப்படியொரு பெயர் ராசியுடன் தமிழ்சினிமாவில் அறிமுகமாகிய பானுவுக்கு மட்டும் அதிர்ஷ்டம் ஆறாகவும் ஓடவில்லை, அடி தொண்டையையும் நனைக்கவில்லை.

இத்தனைக்கும் விஷாலுடன் அவர் நடித்த இந்த தாமிரபரணி ஹிட்! அதன்பின் எடைக்கு எடை சம்பளம் கேட்டு இன்டஸ்ட்ரியையே அதிர வைத்த பானுவை சினிமாவும் மறந்தது.

ரசிகர்களும் மறந்தார்கள். அவர் மீண்டும் திரும்பி வந்தபோது யாரும்மா நீ என்று கேட்காத குறையாக வரவேற்றது தமிழ்சினிமா.

அடுத்தடுத்து அவர் நடித்த இரு படங்களும் வந்த வேகத்தில் பெட்டிக்குள் முடங்கிக் கொள்ள, பானுவின் எதிர்காலம் பரவசமாக இல்லை.

இந்த நேரத்தில்தான் வசந்த் நடிக்கும் மூன்று பேர், மூன்று காதல் படத்தில் நடிக்க அழைத்தார்களாம். முன்னொரு காலத்தில் சம்பளத்தை கறாராக பேசிய பானு, இந்த முறை கப்சிப்பென்று ஒப்புக் கொண்டார்.

இந்த புதிய படத்தில் வசந்தின் மகன் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஆனாலும் பானு அவருக்கு ஜோடியில்லை. படத்தில் இன்னொரு முக்கிய கேரக்டரில் நடிக்கும் சேரனுக்குதான் ஜோடி.

ஜாடியும் மூடியும் சரியாதான் இருக்கு!

No comments:

Post a Comment

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...