நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Saturday, December 3, 2011

அரசியலில் இது எல்லாம் சகசமப்பா

`தந்தையும் தம்பியும்' என்ற புத்தக வெளியீட்டு விழா சென்னை தியாகராயநகர் சர்.பிட்டி. தியாகராயர் அரங்கத்தில் நேற்று மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார்.


சிறப்பு விருந்தினராக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.

புத்தகத்தை பா.ம.க.வில் இருந்து நீக்கப்பட்ட வேல்முருகன்,

தி.மு.க.வில் இருந்து விலகி நிற்கும் முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

நிகழ்ச்சிகளை திரைப்பட இயக்குனர் தாமிரா தொகுத்து வழங்கினார். விழா நிறைவில் நாளந்தா பதிப்பக ஆசிரியர் பொ.தங்கபாண்டியன் நன்றியுரை வழங்கினார்.


முன்னதாக புத்தக வெளியீட்டு விழாவிற்கு வந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவை, தி.மு.க. முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி, வேல்முருகன் ஆகியோர் கைக்குலுக்கி வரவேற்று மேடைக்கு அழைத்து சென்றனர்.

No comments:

Post a Comment

இம்புட்டுத்தூரம் வந்தீங்க...கோடான கோடி நன்றிங்க., மனசில பட்டதை.....பட்டுன்னு சொல்லுங்க...