நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, November 16, 2011

பெண்ணின் ‘அந்த’ இரண்டு!

சந்தோஷ் சிவன் உருமி என்ற மலையாள படத்தை இயக்கி இருக்கிறார். இது தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. 

ப்ரித்விராஜ்ஜெனிலியா, பிரபுதேவா, வித்யாபாலன், தபு, ஆர்யா மற்றும் நித்யா மேனன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தீபக்தேவ் இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை வைரமுத்து எழுதியுள்ளார்.
 
இந்த படத்தின் இசை விழாவில் பேசிய வைரமுத்து, இந்த படத்தில் பாடல் எழுதியதற்காக நான் பெருமை படுகிறேன். தீபக் தேவ் அருமையாக இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் சங்க இலக்கிய மொழியை கையாண்டுள்ளேன். இந்த படத்தின் 15ஆம் நூற்றாண்டு என்ற களம் தான் நான் பாடல் எழுத என்னை ஊக்குவித்தது.

இதில் ஒரு பாட்டு உண்டு...

உரை விட்டு வந்த வாளோ...
ஒளிவிட்டு வந்த வேலோ...
திருமகன் அவர் யாரோ...
திருவுளம் புரிவாரோ... என்ற பாட்டு.

இதில் சங்க இலக்கிய மொழியை கையாண்டிருக்கிறேன்.

கமல்ஹாசன் கூட பேசியிருக்கிறார் சினிமாவில் தமிழ் வளர்ப்பது கடினம் என்று, அவர் எவ்வளவு நொந்து அதை சொல்லியிருப்பார் என்பது எனக்கு தெரிகிறது. ஆனால்

சினிமாவில் இன்னும் தமிழ் வளர்க்க முடியும் என்பதற்கு உருமி ஒரு எடுத்துக்காட்டு.

அந்த பாடலில் இப்படி ஒரு இடம் வருகிறது...

ஒரு பெண் போர்வீரனை நேருக்கு நேர் நோக்கி,
அதோ அதோ உன் ஒரு கரம் உருக்கி களிரொன்று எரிகின்றாய்...
இதோ இதோ என் இரு களிர் அடக்க என் குடில் வருகின்றாய்... என்று பாடுகிறாள்.

உன் ஒரு கையால் ஒரு யானையை அடக்கிவிட்டாய், என் இரண்டு யானையை அடக்க இப்போது நீ முயற்சி செய்கின்றாய்என்பது அந்த வரிகளின் பொருள்.

அந்த இரு களிருஎன்ன என்பது அறிந்தோர் அறிவாராக, தெரிந்தோர் தெரிவாராக என்று கவிஞர் சொல்லிக்கொண்டிருக்க... அரங்கத்தில் ஒருவர் மட்டும் கைதட்டினார், உடனே கவிஞர் அந்த ரசிகன் கை தட்டினான் அல்லவா, அவனுக்குத் தான் இந்த வரி. இந்த வரியின் அர்த்தம் புரியாதவர்கள் அவரிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் என்று சொல்ல அரங்கமே கைத்தட்டியது.

இது நான் எழுதிய வரிகள் அல்ல... இரண்டாயிரம் வருடத்துக்கு முன்பு புறநானூற்றில் வருகிர வரி. இந்த இரண்டாம் நூற்றாண்டில் வருகிற பாட்டை 15ஆம் நூற்றாண்டு கதைக்கு 21ஆம் நூற்றாண்டில் எழுதியிருக்கிறேன். அதற்காக சந்தோஷ் சிவனுக்கு நன்றி சொல்கிறேன் என்றார். 

படத்தைப் பற்றி பேசிய வைரமுத்து, இதில் ப்ரித்விராஜ் ஒரு வீரமுள்ள ஆண்மகனாக, சிங்கம் போல வருகிறார். ஜெனிலியாவை படங்களில் பார்த்திருக்கிறோம், ஆனால் இதில் அந்த பெண் வாள் ஏந்தி சண்டையிடும்போது ஆச்சரியமாக உள்ளது. அந்த பெண்ணிடம் வாள் கொடுக்க வேண்டும் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். ஏனென்றால் அந்த பெண்ணே வாளின் உயரம் தான் என்று கவிஞர் கிண்டலடிக்க அரங்கம் அதிர கைத்தட்டு விழுந்தது.

லைலா அவ்வளவு ஒன்றும் அழகில்லையாம். அவள் கருப்பாம். அவளின் மூக்கு சப்பையாக இருக்குமாம். ஆனால் மஜ்னு சொல்கிறான்... அவளை என் கண்களைக் கொண்டு பார்க்க வேண்டும். உங்கள் கண்களால் பார்த்தால் அவள் அழகி இல்லை. என் கண்களால் பார்த்தால் அவள் பேரழகி என்றான். அது போல நாம் சந்தோஷ் சிவனின் கண்களால் பார்க்க பழகிக்கொண்டால் உலகம் அழகாக தெரியும் என்று பேசினார் வைரமுத்து.

திமுக எம்.பி. நடிகர் ரிதீஷ் குமார் கைது!

நில அபக‌ரி‌ப்பு வழ‌க்‌கி‌ல் ‌தி.மு.க. நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர் நடிக‌ர் ‌ரி‌‌த்‌தீ‌‌ஷை காவ‌ல்துறை‌யின‌ர் இ‌ன்று கைது செ‌ய்து ‌சிறை‌யி‌ல் அடை‌த்தன‌ர்.

‌த‌மி‌ழ் ‌சி‌னிமா‌வி‌ல் குறு‌கிய கால‌த்‌தி‌ல் கொடி க‌ட்டி பற‌ந்தவ‌ர் நடிக‌ர் ‌ரி‌த்‌தீ‌ஷ். இவ‌ர் நடி‌த்த நாயக‌ன் எ‌ன்ற பட‌ம் ‌மிக‌ப் பெ‌ரிய வெ‌ற்‌றி பெ‌ற்றது.

இதை‌த் தொட‌ர்‌ந்து ராமநாதபுர‌ம் நாடாளும‌ன்ற தொகு‌தி‌யி‌ல் ‌தி.மு.க. சா‌ர்‌பி‌‌ல் போ‌ட்டி‌யி‌ட்டு வெ‌ற்‌றியு‌‌ம் பெ‌ற்று ‌வி‌ட்டா‌‌ர். எ‌ம்.‌பி. ‌சீ‌ட்டை பல கோடி ரூபா‌ய் கொடு‌த்து வா‌ங்‌கியதாக அ‌ப்போது இவ‌ர் ‌மீது கு‌ற்ற‌ச்சா‌ற்று எழு‌ந்தது.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் கா‌‌ஞ்‌சிபுர‌ம் மாவ‌ட்‌ட‌ம் ஸ்ரீபெ‌ரு‌ம்புதூ‌ர் அருகே 90 ‌செ‌ன்‌ட் ‌நில‌த்தை அபக‌ரி‌த்ததாக நடிக‌ர் ‌‌‌‌ரி‌‌த்‌‌தீ‌ஷ் ‌மீது வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்த கா‌ஞ்‌சிபுர‌ம் காவ‌ல்துறை‌யின‌ர் இ‌ன்று கைது செ‌ய்தன‌ர்.

கைது செ‌ய்ய‌ப்ப‌ட்ட நடிக‌‌ர் ‌‌‌ரி‌த்‌தீ‌ஷ் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஆஜ‌ர்ப‌டு‌த்த‌ப்ப‌ட்டு புழ‌ல் ம‌த்‌திய ‌சிறை‌யி‌ல் அடை‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.

இதுவரை ‌தி.மு.க. மு‌ன்னா‌ள் அமை‌ச்ச‌ர்களை கைது செ‌ய்து ‌சிறை‌யி‌ல் அடை‌த்து வ‌ந்த முதலமை‌ச்ச‌ர் ஜெயல‌லிதா த‌ற்போது முத‌ன் முறையாக நாடாளும‌ன்ற உறு‌ப்‌பினரை கைது செ‌ய்து ‌சிறை‌யி‌ல் அடை‌‌த்து‌ள்ளா‌ர் எ‌ன்பது ‌‌நினை‌வி‌ல் கொ‌ள்ள‌த்த‌க்கது.

தூக்கு தண்டனை காட்டுமிராண்டித்தனமானது

டெல்லியில் நடந்த இந்தியாவில் தூக்குத் தண்டனை ஒழிப்பு என்ற பெயரிலான 2 நாள் கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசும்போது இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நீதிபதி ஏ.கே.கங்குலி பேசுகையில், நமது சட்டத்தில் தூக்குத் தண்டனை இடம் தரப்பட்டுள்ளது. ஆனால் ஒருவருக்குத் தூக்குத் தண்டனை தருவது என்பது காட்டுமிராண்டித்தனமானது, வாழும் உரிமைக்கு எதிரானது, ஜனநாயக விரோதமானது, பொறுப்பற்றது என்று நான் தனிப்பட்ட முறையில் கருதுகிறேன்.

வெற்று அனுமாங்களால் ஒருவருக்கு நமது அரசியல் சட்டம் அளித்துள்ள வாழ்வதற்கான உத்தரவாதத்தை இது கேள்விக்குறியாக்கி விடக் கூடாது.

மிக மிக அரிதான சம்பவங்களில் மட்டுமே தூக்குத் தண்டனை என்ற சொல் மிகவும் பலவீனமாக உள்ளது. எது அரிய செயல் என்பதை தீர்மானிப்பது சுலபமல்ல. ஒவ்வொரு நீதிபதியின் மன நிலையைப் பொறுத்து, அவர் முடிவெடுப்பதைப் பொறுத்து தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. அரசியல் சாசனச் சட்டம் நிர்ணயித்துள்ள, வழங்கியுள்ள அனைத்து அம்சங்களையும் அப்போது நீதிபதிகள் கருத்தில் கொண்டாக வேண்டும்.

ஒருவரை மரணக் குழியில் தள்ளுவது எனபது நமது சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஒரு தண்டனைதான் என்றாலும், அது காட்டுமிராண்டித்தனமானது. ஒருவரின் வாழும் உரிமையை நிராகரிப்பதாக அது அமையும்.

எந்தவித சந்தேகமும் இல்லாமல் குற்றம் சாட்டப்பட்டவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட வேண்டும். ஆனால் அப்படிப்பட்ட நிலை இதுவரை உருவாகவில்லை.

எனவே ஒரு நீதிபதி யாருக்காவது மரண தண்டனை கொடுக்க தீர்மானித்தால், முதலில் அதற்கான சூழல்களை மிக மிக கவனமாக ஆராய்வது அவசியம். அந்த குற்றவாளி மீண்டும் திருந்த வாய்ப்பே இல்லை என்பதை சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் கோர்ட்களில் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க வேண்டும். அப்படிப்பட்ட சூழலில் மரண தண்டனை குறித்த பரிசீலனைகளைச் செய்யலாம் என்றார் கங்குலி.

இந்தியாவில் தூக்குத் தண்டனையை ஒழிக்க வேண்டும் என்ற குரல் வலுத்து வரும் நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதி ஒருவர், தூக்குத் தண்டனைக்கு எதிராக வலுவாக குரல் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூக்குத் தண்டனைக்கு எதிரான போராட்டங்களுக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.