நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, November 21, 2011

விஜய்யின் புது சென்ட்டிமென்ட்...
















வேலாயுதம் ஹிட் ஆனதிலிருந்தே முருகன் சென்ட்டிமென்ட் பிடித்தாட்டுகிறது விஜய்யை. படி தாண்டவே சிரமப்பட்டுக் கொண்டிருந்த அவரது சமீபத்திய படங்களில் வேலாயுதத்திற்கு மட்டும் பாரசூட்டே கிடைத்தது. அதன்விளைவாகதான் இந்த வேலாயுதக்கடவுள் சென்ட்டிமென்ட்டோடு, விஜய்யை இணைத்து பேச ஆரம்பித்திருக்கிறது கோடம்பாக்கம்.

அதை உறுதி செய்வது போல, தனது அடுத்த படத்தின் ஷெட்யூலை தீர்மானித்தாராம் விஜய். படத்தின் துவக்கவிழா, மற்றும் முதல் பத்து நாட்கள் படப்பிடிப்பு இரண்டுமே திருச்செந்துரில் இருக்கட்டும் என்று கூறியிருக்கிறாராம். சூரனை வதம் செய்த முருகன் குடிகொண்டிருக்கும் இடம்தான் திருச்செந்துர்.

எ.ஆர்.முருகதாஸ் (பார்றா... இங்கயும் ஒரு முருகன்) இயக்கவிருக்கும் இந்த படத்தில் மும்பை தாதாவாக நடிக்கிறார் விஜய். நாயகன் வெளிவந்து பல வருடங்கள் ஆகிவிட்டதால் மீண்டும் அதே டைப் கதையை எடுக்கவிருக்கிறார் முருகதாஸ். திருச்செந்துரிலிருந்து மும்பைக்கு போகிற விஜய் அங்கு என்னவாகிறார் என்று முடியுமாம் படம்.

படத்தின் கதாநாயகியாக யார் யார் பெயரையோ சொல்லி உழப்பிக் கொண்டிருக்கிறார்கள். வரப்போவது நிச்சயம் வள்ளியாக இருக்கப் போவதில்லை. வாயில் நுழையாத பெயரோடு ஏதாவது ஒரு கள்ளிகாத்துக் கொண்டிருப்பார்.

கடைசி செய்தி- காஜல் அகர்வாலிடம் பேசிக் கொண்டிருக்கிறார்களாம்.

டென்சனைக் குறைங்க அழகா மாறிடுங்க!


எப்பொழுது பார்த்தாலும் சிரித்த முகத்துடன் எதையும் டேக் ஈசியாக எடுத்துக்கொள்பவர்கள் ஒரு ரகம். எதற்கெடுத்தாலும் டென்சன் ஆகி கத்தித் தீர்ப்பவர்கள் ஒரு ரகம்.

டேக் இட் ஈசி ரக ஆட்கள் என்றைக்கும் ஒரே மாதிரி இருப்பார்கள். அவர்களின் அழகு என்றைக்குமே மாறாது. உடல்நலத்திற்கும் எந்த தீங்கும் ஏற்படாது.

காரணம் அவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருப்பதுதான். ஆனால் டென்சன் பார்ட்டிகள் அழுது வடிந்து கொண்டு, வயதான தோற்றத்திற்கு தள்ளப்பட்டுவிடுவார்கள்.
நோயும் எளிதில் தாக்கத் தொடங்கிவிடும். அதற்குக் காரணம் அவர்களின் டென்சன்தான் என்று ஆய்வு ஒன்றில் தெரியவந்தது.

பியூட்டி ப்ரெஸ் யாருக்கு?
இயற்கையான அழகு யாருக்கு கிடைக்கும்? என்கிற கோணத்தில் அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் ஒரு ஆய்வை மேற்கொண்டார்கள்.
500க்கும் மேற்பட்ட இளம் ஆண்கள் மற்றும் பெண்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களிடம், தினமும் அவர்கள் மேற்கொள்ளும் செயல்களில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன.

ஆய்வின் முடிவில் அடிக்கடி டென்ஷனாகஇருப்பவர்களைக் காட்டிலும் டென்ஷன் ஆகாமல் எதையும் டேக் இட் ஈஸியாக எடுத்துக்கொள்பவர்கள் `ப்ரெஷ்’ ஆகவும், அழகாகவும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அழகிற்கும் மனதிற்கும் தொடர்பு
அழகுக்கும் மனதிற்கும் நிறையவே தொடர்பு இருக்கிறது. அந்த மனதை இயற்கையாக அதாவது, டென்ஷன் இன்றி வைத்துக்கொண்டால் முகமும் அழகாக இருக்கும்; உடலும் ஆரோக்கியமாக இருக்கும்’ என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அதனால் நம் முன்னோர்கள் மனதை அமைதியாக வைத்துக்கொண்டால் முதுமை நம்மை அண்டாது என்று தெரிவித்துள்ளனர்.

என்ன டென்சன் பார்ட்டிகளே நடப்பது நடந்துதான் தீரும். எனவே உங்கள் டென்சனை தூக்கிப்போடுங்கள் அழகாக மாறுங்கள்.

ஹன்ஷிகா தோற்றத்தில் பெருசு - வயதளவில் சிறுசுதான்!


தமிழ் சினிமாவில் நடிக்க, தான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளதாக நடிகை ஹன்சிகா மோத்வானி பெருமிதம் கொள்கிறார். பாலில் தோய்த்து எடுத்த முத்துகள் போல, தன் அழகான சிரிப்பாலும், கண்மூடி தூங்கினாலும் கனவோடு வந்து நிற்கும் அழகிய முகம் ஹன்சிகாவுடையது.

தனுஷில் தொடங்கி ஜெயம் ரவி, விஜய் என்ற விறுவிறுவென முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு வருகிறார் ஹன்சிகா. கடைசியாக விஜய்யுடன், இவர் நடித்த வேலாயுதம் படம் ஹிட்டானது, ஹன்சிகாவை ரொம்பவே மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

தற்போது சிவா மனசுல சக்தி, பாஸ் என்ற பாஸ்கரன் பட புகழ் ராஜேஷ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலினுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து வருகிறார்.

தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பது பற்றி ஹன்சிகா கூறுகையில், தமிழ் சினிமாவில் நடிப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. தமிழில் நடிக்க நான் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன்.


எனக்கு இப்போது வெறும் 20வயது தான் ஆகிறது. இன்னும் எவ்வளவோ காலம் இருக்கிறது. அதற்குள், நல்ல நல்ல படங்களில் நடித்து சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டும். அதுதான் என்னுடைய கனவு, லட்சியம், எல்லாம் என்று கூறியுள்ளார்.

மீண்டும் நயன்தாரா!?


பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ளவிருக்கும் நயன்தாரா, திருமணத்துக்குப்பிறகு  மீண்டும் சினிமாவில் நடிப்பது பற்றி முடிவெடுப்பேன் என்று தெரிவித்துள்ளார்.

 நயன்தாரா சினிமாவில் நடிப்பாரா? மாட்டாரா? என்று எழுந்த கேள்விகளுக்கு, நடித்துக்கொண்டேயிருக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். ஆனால் பிரபுதேவாவை திருமணம் செய்து கொள்ளும்வரை நடிக்கும் எண்ணம் இல்லை. அதன்பிறகு நல்ல வாய்ப்புகள் வந்தால் மீண்டும் நடிப்பது பற்றி யோசித்து முடிவெடுப்பேன் என்று கூறியுள்ளார் நயன்தாரா.

நடிகை அஞ்சலி யாரையும் காதலிக்கவில்லை !

அவர் வெளியிட்டுள்ள செய்தியில், அங்காடித்தெரு மூலம் எனக்கொரு அங்கீகராத்தை கொடுத்த ரசிகர், ரசிகைகள் மற்றும் கலையுலக நண்பர்களுக்கு எங்கேயும் எப்பொழுதும் நன்றியுள்ளவளாக இருப்பேன். வாழ்க்கையில் ஜெயிக்க, போராடித்தான் ஆக வேண்டும். ஐந்து ஆண்டுகள் எனது போராட்டத்துக்குப் பிறகு இன்று நல்ல நடிகை என்று அந்தஸ்தில் கொஞ்சம் வளர்த்திருக்கிறேன். இப்போது தான் நல்ல நல்ல படங்கள் எனக்கு வருகிறது. அந்த மகிழ்ச்சியில் நான் இருக்கிறேன். அந்த மகிழ்ச்சியை கெடுப்பது போன்று ஒரு நடிகருடன் காதல், விரைவில் திருமணம் என்று பத்திரிக்கைகளில் வருகிற செய்திகளை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன்.

என்னுடன் இணைத்து கிசுகிசுக்கப்படும் நடிகருடன் இணைந்து ஒரே ஒரு படத்தில் தான் நடித்தேன். அதற்குபிறகு வந்த கிசுகிசுக்களால், இனி அந்த நடிகருடன் நடிப்பதில்லை என்று முடிவெடுத்து, சில படங்களை தவிர்த்தேன். நான் இன்னும் வளர வேண்டும். நல்ல நடிகை என்று விருதுகளை வாங்க வேண்டும் என்று ஆசையில் இருக்கிறேன். எனது இந்த ஆசைகளுக்கு உங்களிடமிருந்து வாழ்த்துக்களையும், ஆதரவையும் வேண்டுகிறேன்.

எனக்கு இதுவரை யாருடனும் காதல் இல்லை... இதை பகிரங்கமாக அறிவிக்கிறேன். தயவு செய்து மேற்கொண்டு அந்த நடிகருடன் இணைத்து வரும் கிசுகிசுக்களை நம்பாதீர்கள்.

இவ்வாறு அஞ்சலி கூறியுள்ளார்

கூடங்குளத்திலிருந்து இலங்கைக்கு மின்சாரம்


இலங்கைக்கு கடல் வாயிலாக மின்சாரம் வழங்குவதற்காகத் தான் இந்திய அரசு கூடங்குளம் அணுமின் நிலையத்திட்டத்தில் இந்த அளவு ஈடுபாடு காட்டுகிறது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக இந்த அளவுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ள போதிலும், கடல் வாயிலாக இலங்கைக்கு மின்சாரம் கொடுக்கத் தான் இந்திய அரசு இந்த திட்டத்தில் இவ்வளவு முனைப்பாக உள்ளது.

9-6-2010 அன்று இதற்கான ஒப்பந்தத்தில் இந்திய அரசும், இலங்கை அரசும் கையெழுத்திட்டுள்ளன. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் தயாரிக்கப்படும் மின்சாரத்தில் பாதிக்கும் குறைவாகத் தான் தமிழகத்திற்கு கிடைக்கும். ராஜீவ் காந்தி பிரதமராக இருக்கையிலேயே நான் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தேன்.

ஈழத் தமிழர்களை ஈவு, இரக்கமின்றி கொன்று குவித்த இலங்கைக்கு மின்சாரம் கொடுப்பதற்காக தமிழக மக்கள் ஏன் தங்கள் உயிர்களை பணையம் வைக்க வேண்டும்? ஈழத் தமிழர் விவகாரம் மற்றும் முல்லைப்பெரியாறு அணை பிரச்சனை ஆகியவற்றில் பாராமுகமாக இருக்கும் மத்திய அரசு கூடங்குளம் விவகாரத்தில் மட்டும் அதிக ஆர்வம் காட்டுவது தமிழக மக்களின் நன்மைக்காக அல்ல என்றார்

கணவர் பொய் சொல்கிறார்


கணவன்மார்கள் தங்கள் மனைவியிடம் பொய் சொல்வதுண்டு. காரணம் மனைவி மனம் வருத்தப்படக்கூடாது என்பது தான்.
அப்படி கணவன்மார்கள் எப்பொழுதெல்லாம் பொய் சொல்கிறார்கள் என்று பார்க்கலாம். ஒரு சேலையைக் கட்டிக் கொண்டு போய் கணவன் முன் நின்று என்னங்க இந்த சேலை எப்படி இருக்கு என்று மனைவி கேட்பாள். அதற்கு கணவன் நீயும், உன் சேலை செலக்ஷனும் என்று உண்மையைச் சொல்ல முடியுமா?.

உடனே சேலை ரொம்ப நல்லா இருக்கும்மா என்பார்கள். அவர்கள் சொல்வது சேலையைத் தான், அந்த சேலை உங்களுக்கு நன்றாக இருக்காவிட்டாலும் கூட பெரும்பாலானவர்கள் அப்படித்தான் சொல்கிறார்களாம். நல்லா இல்லைன்னு சொன்னா அடுத்து என்ன நடக்கும் என்பது ஆண்களுக்குத்தானே தெரியும்!.

மனைவியுடன் பொது இடத்தில் நடந்து செல்லும்போது ஒரு அழகான பெண் யாராவது அந்த வழியாகச் சென்றால், அப்படியே ஒரு சின்ன லுக் விடுவது பலருக்கும் இருக்கும் பழக்கம். அப்போது மனைவி கணவரை நோக்கி, என்ன கண்ணு கண்டமேனிக்கு திரியுது. இப்ப எதுக்கு அந்தப் பெண்ணை பார்த்தீங்க என்று கேட்டால்.

சீச்சீ என்னைப் போய் இப்படி நினைத்துவிட்டாயே. நான் அந்த பெண்ணைப் பார்க்கவே இல்லை, நீ பக்கத்தில் இருக்கும்போது நான் எதுக்கு அதைப் பார்க்கணும் என்பார்கள். இதுவும் கூட பொய்களில் ஒன்றுதான். ஏதாவது புதுசா ஒரு ஐட்டம் சமைத்துக் கொண்டு வந்து சாப்பிடச் சொல்வார்கள்.
கணவன்மார்களும் மூச்சு, மொட இல்லாம சாப்பிட்டுவிட்டு எழுந்து விடுவார்கள். என்னங்க நான் புதுசா சமைத்தது எப்படி இருந்தது என்று கேட்பார்கள், மனைவிகள். அதற்கு கணவன்மார்கள் ஓ, ரொம்ப நல்லா இருந்தது என்று பாராட்டுவார்கள். மனைவி உச்சி குளிர்ந்து போய் அந்த உணவை தன் வாயில் வைத்தவுடன் தான் அது எவ்வளவு மோசமாக இருந்தது என்றே உணர்வார்கள்.

அதற்காக எல்லோரும் மோசமாக சமைப்பவர்கள் இல்லை என்பதையும் இங்கு சொல்லியாக வேண்டும். இருந்தாலும், சாப்பாடு நல்லா இல்லாவிட்டாலும் கூட, அதையும் பெண்கள் அழகாக சமாளிப்பார்கள். அன்னைக்கு ஒரு நாள் நான் ஏதோ புதுசா ஒரு ரெசிபி சமைச்சேன். அதை வாயில் வைக்கவே முடியவில்லை. ஆனால் என் புருஷன் ஒரு வார்த்தைக் கூட சொல்லாம அமைதியா சாப்பிட்டார். அவர் மாதிரி வருமா என்று பெருமை பேசிக்கொள்வார்கள்.

அதாவது கணவன் பொய் சொன்னாலும் கூட, அதை பெருந்தன்மையாக கருதுவதுதான் ஒரு மனைவியின் குணம். கணவன் மனைவி இருவருக்கும் ஒரே மாதிரியான டேஸ்ட் இருக்க வேண்டும் என்றில்லை. சந்தோஷ் சுப்பிரமணியம் படத்தில் வருவது மாதிரி, தானே கணவருக்கு ஒரு சட்டையைத் தேர்ந்தெடுத்து அது அவருக்கு பிடிக்காவிட்டாலும் சூப்பர் என்று சொல்லிவிடுவார்கள் மனைவிகள்.

உடனே அது தனக்கு பிடிக்காவிட்டாலும் மனைவியின் சந்தோஷத்திற்காக அந்த சட்டையை அணிந்து கொள்வார்கள் ஆண்கள். இந்த மாதிரி சின்னச் சின்ன விஷயங்களில் ஆண்கள் பொய் சொல்வது மனைவி மனம் வருத்தப்படக் கூடாது, தாம்பத்யத்தில் இனிமை கெட்டு விடக் கூடாது, குடும்பத்தில் பூசல் வெடித்து விடக் கூடாது என்பதற்காகத் தான். மற்றபடி எதுக்கெடுத்தாலும் பொய் சொன்னா கண்டிப்பாக பூகம்பம்தான் வெடிக்கும் என்பதை மனதில் கொள்வது நல்லது.