நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Wednesday, November 30, 2011

கண்ணா..! மூன்று லட்டு தின்ன ஆசையா?


இந்த மூன்று பெண்களும் 1990 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி ஒரே பிரசவத்தில் பிறந்தவர்கள். இன்று வரை ஒன்றாகவே வாழ்கிறார்கள்.
தாயுடன் மட்டுமே வாழும் இவர்களின் திருமணத்தில் தான் சிக்கலே வந்திருக்கிறது. தாயார் பலமுறை திருமணத்திற்கு வற்புறுத்தியும் இவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.


திருமணத்தின் பின்னர் தாம் பிரிந்து விடுவோம் என்பதே இவர்களது நீண்ட நாள் பயம் இதற்கு ஒரே வழி இவர்கள் மூவரும் ஒரே நபரை திருமணம் செய்வதுதான்.




யாருக்கு அந்த பாக்கியம் கிடைச்சிருக்கோ?

ஓன்று வாங்கினால் இரண்டு இலவசம்!

லட்சுமிராயை பிறந்த மேனியாக பார்க்கலாம்.(ங்கொய்யால......)


நடிகர் லாரன்ஸூடன் காஞ்சனா படத்திலும் அஜித்துடன் மங்காத்தா படத்திலும் நடித்த கதாநாயகி லட்சுமி ராய், படத்திற்கு தேவைப்பட்டால் நிர்வாணமாககூட நடிக்க தயார் என கூறியுள்ளார்.

இச்செய்தி மற்ற கதாநாயகிகள் மத்தியில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவில் சேலையுடன் என்ட்டர் ஆகும் கதாநாயகிகள், ஓரிரு படங்கள் வெற்றி பெற்றவுடன் கவர்ச்சியாகவும், நிர்வாணமாகவும் நடிக்க தயார் என்கிறார்கள்.

அந்த வரிசையில் தற்போது நிர்வாணமாக நடிக்க என்ட்டர் ஆகி இருப்பவர் கவர்ச்சி கன்னி லட்சுமி ராய்.

இவருக்கு ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் படத்தில் நடிக்கவேண்டும் என்பது நீண்ட நாளைய கனவாம். ஆங்கிலப் படங்கள் என்றால் நிர்வாண காட்சிகளில் நடிக்க வேண்டுமே என்றால், தான் அதற்கும் தயார் என தயங்காமல் கூறுகிறார் இந்த கவர்ச்சி கன்னி லட்சுமி ராய்.

முத்தங்கள் பலவகை...


உறவின் தொடக்கமே முத்தம்தான். இன்பத்தின் திறவுகோலான முத்தம் பண்டைய காலத்தில் இருந்தே பல விதமாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.வகை வகையான முத்தமிட்டு படு லாவகமாக துணையை குஷிபடுத்தியுள்ளனர்.

 முத்தத்தின் வகையை அறிந்து கொள்ள விரும்புபவர்கள் தொடர்ந்து படியுங்கள்

முத்தமும் நம்பிக்கையும்:

முத்தம் குறித்த பல்வேறு நம்பிக்கைகளும் உலக மக்களிடம் உலவி வருகின்றன. முத்தம் கொடுப்பதன் மூலம் நமது உடலில் கலோரிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைகிறதாம். எவ்வளவு குறைகிறது என்பதை அறுதியிட்டுக் கூற முடியாவிட்டாலும் கூட, முத்தம் கொடுக்கப்படுவதைப் பொறுத்து நிமிடத்திற்கு 4 முதல் 6 கலோரி வரை குறையுமாம். அதேசமயம், விநாடிக்கு 12 கலோரி வரை குறைகிறது என்று இன்னொரு சாரார் கூறுகின்றனர்.

ரோமானிய முத்தம்

முத்தத்திற்கு வரலாறுகளில் ஒவ்வொரு விதமான அர்த்தம் கூறியுள்ளனர். ரோமானியர்கள், கல்யாண நிகழ்ச்சிகளின் முடிவில் ஒருவருக்கொருவர் முத்தத்தை அன்புப் பரிமாற்றமாக பகிர்ந்து கொள்வார்களாம்.
ஆன்மாக்கள் சங்கமிக்கும் ப்ரெஞ்ச் கிஸ் உலகப் புகழ் பெற்றது. இந்த முத்தத்திற்கு ஆன்மாவின் முத்தம் என்று பிரெஞ்சுக்காரர்கள் பெயர் வைத்துள்ளனர். இரு நாவுகள் சம்பந்தப்பட்டது இது. இந்த முத்தத்தின் மூலம் இருவரின் ஆன்மாவும் ஒன்றாக சங்கமிப்பதாக பிரெஞ்சுக்காரர்கள் நம்புகிறார்கள். இதற்குப் பிரெஞ்சு முத்தம் என்று பெயர் இருந்தாலும் கூட பிரான்ஸில் இதை இங்கிலீஷ் கிஸ் என்றுதான் அழைக்கிறார்களாம்.

உணர்ச்சியை தூண்டும் முத்தம்

முத்தம் கொடுப்பதற்கு முன்பு உங்களது துணையின் உதடை, மெதுவாக உங்களது உதட்டால் தடவிக் கொடுங்கள். உணர்ச்சிகள் தூண்டப்படுவதை அனுபவிப்பீர்கள். பிறகு முத்தத்திற்குப் போகலாம்.

நெக் கிஸ்

இது கழுத்தை கவரும் முத்தம். உதடுகளில் முத்தமிடுவதற்கு முன்பு உங்களது துணையின் கழுத்தை மென்மையான முத்தத்தால் ஒரு சுற்று சுற்றி விட்டு பின்னர் உதடுகளுக்கு போங்கள். உற்சாகம் கொப்பளிக்கும்
ஜில்லென்ற முத்தம் சின்ன ஐஸ் கியூபை எடுத்து உங்களது வாய்க்குள் போட்டுக் கொள்ளுங்கள். பின்னர் வாயைத் திறந்து, உங்களது பார்ட்னரை நெருங்கி அந்த ஐஸ் கியூபை அவரது வாய்க்குள் பாஸ் செய்யுங்கள். உங்களது நாவால்தான் பாஸ் செய்ய வேண்டும், அப்படியே துப்பக் கூடாது. பிறகு முத்தமிடுங்கள். ஜில்லென்றிருக்கும்.
பழங்களினால் முத்தம்
ஸ்டிராபெர்ரி, திராட்சை அல்லது நறுக்கிய சின்ன மாம்பழத் துண்டு ஒன்றை எடுத்து அதை உதடுகளுக்கு நடுவில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் உங்களது துணையின் உதட்டுடன் வைத்து அழுத்துங்கள். அது நசுங்கி வழியும்போது இருவரும் இணைந்து அதைப் பருகி இந்த ப்ரூட்டி கிஸ்ஸை அனுபவிக்கலாம்.

பபுள் பாத் கிஸ்

பாத் டப்பில் நுரை நிரப்பிய நீரில் இருவரும் இணைந்து குளித்துக்கொண்டே முத்தமிடுவது இந்த வகை. இது குளியலுக்கு குளியல், முத்தத்திற்கு முத்தம் டூஇன்ஒன்.

பபுள்கம் கிஸ்

உங்களுடைய பேவரைட் சுயிங்கம், பபுள்கம்மினை வாயில் போட்டு சுவைத்து முத்தத்தை தொடங்கலாம். அந்த வாசனை முத்தமிடுபவரையும், பெறுபவரையும் உற்சாகப்படுத்தும்.
கொஞ்சம் சூடு கொஞ்சம் குளுமை
முதலில் உங்களது துணையின் உதடுகளை சிறிது நேரம் மென்மையாக சுவையுங்கள். அதன் பின்னர் சற்று பலமாக ஊதுங்கள். முதலில் குளிர்ந்து போயிருக்கும் உதடுகள், நீங்கள் ஊதுவதன் திடீர் வெப்பத்தை சந்திப்பார் உங்களது பார்ட்னர். கூடவே இன்னொன்னும் கிடைக்குமா என்று கோரிக்கையும் வைப்பார்.

பேச்சும் முத்தமும்

இது படு ஜாலியானது, கூடவே உணர்வுகளைத் தூண்டக்கூடியது. இருவரும் நேருக்கு நேர் முகத்தை வைத்துக் கொள்ளுங்கள். இருவரது உதடுகளும் நெருக்கமாக இருக்க வேண்டும். உதட்டோடு உதடு உரச, ஆனால் முத்தம் தரக் கூடாது, எதையாவது சிறிதுநேரம் ஜாலியாக பேசிக் கொண்டிருங்கள். உதடுகள் உரசும், உணர்வுகள் தூண்டப்படும், உள்ளங்கள் நெருங்கி வரும், பின் தொடர்ந்து வரும் உறவு வலுப்படும்.

எஸ்கிமோ முத்தம்

அதேபோல மிகவும் பிரபலமானது எஸ்கிமோ முத்தம். பனிப் பிரதேசங்களில் வசிக்கும் இனுயுட் இன மக்கள் ஒருவர் மீது கொண்ட பாசத்தை வெளிப்படுத்த மூக்கோடு மூக்கு உரச நெற்றி அல்லது கன்னத்தில் அழுத்தமாக முத்தமிடுவது வழக்கம். இதை அவர்கள் கலாச்சாரமாகவே பின்பற்றி வருகின்றனர். உடல்கள் இணைவது மட்டும் உறவுகள் அல்ல, அன்பும் பரிமாறிக் கொள்ளப்பட வேண்டும். அதற்கு முத்தம் ஒரு நல்ல கருவி என்பதால் முத்தத்தில் ஆரம்பியுங்கள் உங்கள் இனிய உறவுகளை.

முத்தம் ஒரு எச்சரிக்கை

உதடோடு உதடு பொருத்தி முத்தமிடும்போது இருவரது வாய்க்குள்ளும் கிட்டத்தட்ட 10லட்சம் பாக்டீரியாக்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன என்பது எச்சரிக்கைச் செய்தி. முத்தமிடுவதன் மூலம் சில வகை நோய்களும் கூட உடல் விட்டு உடல் மாறும் வாய்ப்புகள் உள்ளன. அதேசமயம், முத்தமிடுவதால் எச்ஐவி பரவுவதில்லை என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று எனவே ஜாக்கிரதை.

முல்லைப் பெரியாறு - தமிழக எம்.பி.,க்கள் சொதப்பல்

தமிழகத்தின் நிலையோ, பார்லிமென்டில் நேற்று தலைகீழாக இருந்தது. கேரள எம்.பி.,க்களின் வேகத்தை பார்த்துவிட்டு, தமிழக எம்.பி.,க்களும் காந்தி சிலை அருகே தர்ணா செய்யப் போகின்றனர் என்ற செய்திபரவியது.அங்கு சென்று பார்த்தால், திருமாவளவன் தலைமையில் கோவை நடராஜன், தென்காசி லிங்கம், ஈரோடு கணேசமூர்த்தி என, நான்குபேர் தர்ணாவில் அமர்ந்திருந்தனர். "புரளியை கிளப்பாதே, பொய் செய்தியை பரப்பாதே' என, அந்த நான்கு பேர் மட்டுமே கோஷமிட்டபடி இருந்தனர். அந்த நேரத்தில், காங்கிரஸ் எம்.பி.,யான கே.எஸ். அழகிரி அங்கு வந்து, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

போட்டி தர்ணா:

இவர்களுக்கு போட்டியாக, சில அடி தூரத்தில் கேரளா எம்.பி.,க்கள் 20க்கு மேற்பட்டோர் ஒட்டு மொத்தமாக அமர்ந்து, கோஷங்கள் எழுப்பினர். சில நிமிடங்களில் கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் வயலார் ரவி, இ.அகமது, முள்ளப்பள்ளி ராமச்சந்திரன் ஆகியோர் வந்து கேரளா எம்.பி.,க்களுக்கு தார்மீக ஆதரவு அளித்துவிட்டு, பின்னர், தமிழக எம்.பி.,க்களிடம் வந்து, "தண்ணீர் தருகிறோம், எங்களுக்கு பாதுகாப்பு தாருங்கள்' என, சிரித்தபடியே திருமாவளவனிடம் கூறிச் சென்றனர்.அடுத்த அரைமணி நேரத்தில், பிரதமர் மன்மோகன் சிங்கை தி.மு.க., எம்.பி.,க்கள் சந்தித்து மனு அளித்தனர். தமிழக மீனவர் பிரச்னை மற்றும் முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்காக, தனித்தனி மனுக்களை டி.ஆர்.பாலு தலைமையில் அளித்துவிட்டு வந்தனர்.அங்கும் திருமாவளவன் வந்திருந்தார். அவர்கள் சென்ற சில நிமிடங்களில், தமிழக காங்கிரஸ் எம்.பி.,க்கள் அழகிரி, சித்தன், விஸ்வநாதன், ராமசுப்பு, மாணிக் தாக்கூர், ஆருண் ஆகியோர் வந்திருந்தனர். அவர்களும்தங்கள் பங்கிற்கு மனு அளித்துவிட்டு சென்றனர்.முல்லைப் பெரியாறு அணை
பிரச்னையில், இப்படி தமிழக எம்.பி.,க்கள் ஒற்றுமை, ஒருங்கிணைப்பு இல்லாமல் ஆளுக்கொரு திசையில் நின்றபடி, தனி ஆவர்த்தனம் வாசித்தபடி உள்ளனர். அதேநேரத்தில், இந்த விவகாரத்தில், அரசியல் ஒற்றுமை காட்டி, தற்போதைக்கு கேரளா முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதே உண்மை.

அழைப்பை நிராகரித்த எம்.பி.,க்கள் :கேரள எம்.பி.,க்களுக்கு பதிலடி தர, காந்தி சிலை முன் ஆர்ப்பாட்டம் செய்யும் முடிவை எடுத்து, அது பற்றி தி.மு.க., எம்.பி.,க்களுக்கும், திருமாவளவன் அழைப்பு விடுத்தார்.அவர்களோ, "நாங்கள் பிரதமரை சந்தித்து மனு தரப்போகிறோம்' எனக் கூறிவிட்டு, தர்ணாவில் பங்கேற்காமல் நாசூக்காக கழன்றனர். அ.தி.மு.க., எம்.பி.,க்களை அழைத்த போது, "அம்மாவிடம் இருந்து அனுமதி கிடைக்காமல் வரமுடியாது' என்று சொல்லி விட்டனர்.இடதுசாரி எம்.பி.,க்களில் கூட லிங்கமும், நடராஜனும் மட்டுமே பங்கேற்றனர். இடதுசாரி மூத்த எம்.பி.,க்களான டி.ராஜா மற்றும் டி.கே.ரங்கராஜன் ஆகியோர் வரவில்லை.கேரளாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே சென்று, பிரதமரை சந்தித்து இப்பிரச்னை குறித்து பேசினர். ஏ.கே.அந்தோணி கூட இவ்விஷயமாக பிரதமரிடம் பேசியுள்ளார்.

அதிரடி கவர்ச்சியில் - சோனியா அகர்வால்!

செல்வராகவனுடன் விவாகரத்து பெற்றபிறகு புதுபொலிவுடன் காணப்படுகிறார் நடிகை சோனியா அகர்வால். மீண்டும் சினிமாவில் இரண்டாம் அத்யாயம் எடுத்திருக்கும் சோனியா, அதை தக்க வைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதன்விளைவாக அதிரடி கவர்ச்சியில் இறங்கபோகிறாராம். டைரக்டர் செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டவர் ‌சோனியா அகர்வால். பின்னர் இவர்களுக்குள் ஏற்பட்ட மனகசப்பால் விவாகரத்து பெற்று பிரிந்தனர். செல்வா, கீதாஞ்சலி என்பவரை விரைவில் இரண்டாவது திருமணம் செய்ய இருக்கிறார். தற்போது தனிமையில் இருக்கும் சோனியா மீண்டும் நடிப்பில் தீவிரம் காட்ட ஆரம்பித்து இருக்கிறார்.

தமிழில் இரண்டு படங்களிலும், மலையாளம், தெலுங்கு ஆகியவற்றில் தலா படம் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்நிலையில் சினிமாவில் மீண்டும் அடியெடுத்து வைத்திருக்கும் சோனியா, தன்னை நிலைநாட்டிக்கொள்ள பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறாராம். சமீபத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற சோனியா, படுகவர்ச்சியான உடையில் வந்து, விழாவிற்கு வந்த அனைவரையும் கிறங்கடிக்கச் செய்தார். மேலும் எப்படி கேரக்டரிலும் நடிக்கத் தயார் என்றும், பிகினி உட்பட சென்சார் அனுமதிக்கும் அதிகபட்ச கவர்ச்சிக்கும் தான் நடிக்க தயார் என்றும் கூறிவருகிறாராம். சோனியாவின் இந்த அறிவிப்பால் பல வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளதாம்.  இதனால் கூடுதல் உற்சாகத்தில் இருக்கிறார் சோனியா. அப்ப இனி சோனியா காட்டில் மழை தான்!

இலவசம்.....இலவசம்....!!