நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Tuesday, December 6, 2011

அணு.....அணுவாய்...

அணு.....அணுவாய்...

பவர் உற்பத்திக்கு
மட்டுமல்ல
உயிர் உற்பத்திக்கும்
உத்திரவாதம் தாருங்கள் !

தேச முன்னேற்றத்தில்
மக்கள் நலம் இல்லை
மக்கள் முன்னேற்றத்தில்தான்
தேச நலன் இருக்கிறது !

எங்கள் போராட்டமெல்லாம்
வாழ்க்கைத்தரத்தை
பெருக்கிக்கொள்ள அல்ல -
வாழ்வாதாரத்தை
உறுதிபடுத்திக் கொள்ள...

மனசிலிருந்து அல்ல
உயிரிலிருந்து எழுப்பப்படும்
எங்கள் வினாக்கள் இதுதான்.....

அச்சம் போக்காமல்
ஆலையைத்
தொடங்கலாமா.?

கொடும நோய் தொற்றும்கடும் பயத்தை
விதைக்கலாமா..?

வளர்ந்த நாடுகள் கூட
சாத்தும் கதவுகளை
வலியப்போய் திறக்கலாமா?

காலம் பார்க்காமல்
முத்துக் குளிக்கும் மக்களை
ஆழம் பார்க்கலாமா?

வேருக்கு
வெண்ணிர் ஊற்றுவதுதண்ணீர் ஊற்றுவதுஆகாது..! 

விரதத்தை
முடித்து வைக்க
பழச்சாறு
தராவிட்டாலும்
பாதரசம் தராதீர்கள்..!

மூச்சுப் பிரச்சனையை
வெறும்ஆட்சிப் பிரச்சனையாக மட்டும்பார்க்காதீர்கள்


எழுதியவர் அண்ணா சிங்காரவேலு - அதிராமபட்டினம்  

இணையதளங்களில் கருத்துகளுக்கு தணிக்கையா? தடையா?

இணைய கருத்துகளை தணிக்கை செய்ய அரசு முயற்சிப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் கபில்சிபல் நிராகரித்துள்ளார்.


ஃபேஸ்புக், கூகுள் போன்ற நிறுவனங்கள் முன்பு நாம் கேட்டுக்கொண்டதற்கிணங்க ஒத்துழைப்பு தரவில்லை என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.


அரசின் நடவடிக்கை குறித்து பேசிய கபில்சிபல், இந்தியர்களின் உணர்வுகளையும், மத உணர்வுகளையும் காயப்படுத்துவதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றார்.


ஃபேஸ்புக், டுவிட்டர், கூகுள் போன்றவற்றில் வெளியிடப்படும் சில கருத்துகளும், படங்களும் இந்தியாவில் உள்ள மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளது எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது என்றார் அவர்.


இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துகளை கண்காணித்து அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு செப்டம்பர் மாதம் முதல் ஃபேஸ்புக், மைக்ரோசாப்ட் மற்றும் யாகூ நிறுவனங்களுக்கு தொடர்ந்து கடிதம் எழுதியுள்ளேன். அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளிடமும் பேசியிருக்கிறேன் என அவர் கூறினார்.


நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இதுதொடர்பாக தங்களால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்று இந்த நிறுவனங்கள் கூறிவிட்டன என்றார் அவர்.


இதையடுத்து இதுபோன்ற நிறுவனங்களின் பயனாளர்கள் கருத்துக்களை வெளியிடும் முன்பு கண்காணித்து, முன்கூட்டியே தடுப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு ஆராய்ந்து வருகிறது என கபில் சிபல் கூறினார்.

டிஸ்கி - அப்ப இதுக்கு என்ன அர்த்தம்னேன் 

புகை பிடிக்க கூடாது

Smoking