நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Sunday, December 11, 2011

உலகின் விநோதங்கள் பல! கண்களில் பட்டவை சில!


உலகத்தில் மிக அழகான விலங்குகள் என்றால் பிறந்த குட்டிகள் தான். அவற்றை கையில் எடுத்து கொஞ்சும் அளவுக்கு அவ்வளவு அழகாக தோற்றமளிக்கும்.

அவற்றின் சில விலங்குகளை மிருகக்காட்சிசாலையிலும், பூங்காவிலும் கண்டிருப்போம். இவை பார்ப்பதற்கு மிக அழகாகவும், மனதை கவரும் விதமாக அமையும். நாம் எதிர்காணாத தருணங்களில் எடுக்கப்பட்ட சில வித்தியாசமான விலங்குகளை படத்தில் காணலாம்.












ஓ.பன்னீர் செல்வம் கார் சரமாரி தாக்குதல்




குமுளியில் ஓ.பன்னீர் செல்வம் கார் மீது சரமாரி தாக்குதல்

தமிழ்நாடு சட்டசபை சிறப்புக் கூட்டம்..





முல்லைப் பெரியாறு குறித்து விவாதிக்க டிச 15ம் தேதி தமிழக சட்டசபை சிறப்புக் கூட்டம்..

தமிழர்களை சுட கேரள போலீசாருக்கு உத்தரவு



கேரளாவில் உள்ள குமுளிக்குள் அத்துமீறி நுழையும் தமிழக போராட்டக்காரர்களை கண்டதும் சுட இடுக்கி மாவட்ட எஸ்.பி. ஜார்ஜ் வர்க்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.

இதனால் எல்லையில் குவிந்த தமிழக மக்கள் யாரும் குமுளிக்குள் செல்ல வேண்டாம் என்று தமிழக போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர். எல்லையில் குவிந்த கிராம மக்களை அவரவர் ஊர்களுக்கு திருப்பி அனுப்ப சிறப்பு பேருந்துக்கு தமிழக போலீசார் ஏற்பாடு செய்தனர்.

வாடகைத் தாய் மூலம் ஆண் குழந்தை - அமீர்கான்



பாலிவுட் நடிகர் அமீர் கான்-கிரண் ராவ் தம்பதியருக்கு வாடகைத்தாய் மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. நீண்ட காலத்திற்குப் பிறந்துள்ள இந்தக் குழந்தை எங்களுக்கு மிகவும் விசேஷமானது, சிறப்பானது என்று அமிர்கான் மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார்.  தற்போது 46 வயதாகும் அமீர் கானுக்கும், அவரது மனைவி கிரண் ராவுக்கும் திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லை. இதையடுத்து செயற்கை முறையில் கருவூட்டம் செய்து வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற அமிர்கான் - கிரண் முடிவு செய்தனர்.

அதன்படி செயற்கை முறையில் கருத்தரிப்பு நடத்தப்பட்டு, வாடகைத்தாயின் கருவறையில் அமிர்கான் தம்பதியின் குழந்தை வளர்ந்து வந்தது. தற்போது அழகான ஆண் குழந்தையை அந்த வாடகைத்தாய் பெற்றுள்ளார். இதுகுறித்து அமிர்கான் அளித்துள்ள பேட்டியில், கடவுளின் அருள், அறிவியலின் அற்புதம், எங்களது குடும்பங்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு, அன்பு ஆகியவற்றுக்கு நாங்கள் தலை வணங்குகிறோம். எங்களுக்காக பிரார்த்தனை செய்த, எங்களின் உணர்வுகளை மதித்த அனைவருக்கும் நன்றி கூறுகிறோம், என்று கூறியுள்ளார்.