நாந்தேன்

My photo
என்னை பற்றி நானே சொல்வது அம்புட்டு நல்லாவா இருக்கும்......................................................சரி, எலக்கணம் தெரியாததால் எலக்கியவியாதி எனும் தலக்கணம் எமக்கில்ல.

Monday, August 6, 2012

திருட்டு முழியிலும் திர்ல் இருக்கு

வணக்கம்


யாரோ ஒருவர் கேட்டார் ஒரு பெண்ணிடம்:

நீங்கள் வேலைக்கு போகும் பெண்ணா அல்லது வீட்டில் இருக்கும் மனைவியா?


அந்த பெண் பதிலளித்தார்:

மனைவி - ஆமாம்,   24 மணிநேரம்  வீட்டில் முழு நேரம் வேலை செய்பவள்.



நான் ஒரு அம்மா ,ஒரு மனைவி, மகள் மற்றும் மருமகள்.

நான் ஒரு அலாரம் வைத்த கடிகாரம் தான்

ஒரு சமையல்காரி

வேலைக்காரி

ஒரு ஆசிரியர்

ஒரு பணியாளராக

ஒரு ஆயா

ஒரு நர்ஸ்

ஒரு பாதுகாப்பு அதிகாரி

ஒரு ஆலோசகரும்

ஒரு இன்ப நலம் பேணுபவர்

எனக்கு   விடுமுறை இல்லை

மருத்துவ விடுமுறையோ  அல்லது பாதி நாட்கள் வேலை அப்படி  எதுவும் இல்லை......

முழுவதும் வேலை வேலை மற்றும் இரவு பகல்  இல்லாமல், சொற்சொடர் தான் நான் வாங்கும் சம்பளம்..

நீங்கள் வீட்டில் எல்லா நாளும் என்ன பண்ணுவீர்கள் என இனி எவரேனும் கேட்டால்........................??       கேட்பாங்க...

எல்லா அம்மாக்களும், மகள்/மருமகளுக்கும் , சகோதரிககளுக்கும்
இது சமர்ப்பணம்.



மனபிராந்தி : காத்துவாகில & காதுல

வரலாற்று உண்மை,  உள்நாட்டு போர்கள் நடந்த போது,

அனைவரும் வாசித்து தெரிந்துக்கொள்ள, படைகள் எந்த சேதம் இல்லாமல் திரும்பி வந்தது என எழுதி வைப்பார்கள். 
 
O பேர் பலி (O கொல்லப்பட்டார்கள்), அதாவது O Killed இங்கிருந்து நாம் OK  என்ற சொல்லை பயன் படுத்த ஆரம்பித்தோம்.

அதாவது ஆல் இஸ் வெல்


விஸ்கி : லொள்ளு & ஜொள்ளு

                             திருட்டு முழியிலும் திர்ல் இருக்கத்தான் செய்து...

தூக்கமோ  கண்ணுக்கு எட்டா தொலைவு ... 



முக்கிய குறிப்பு: